
முதலைகளின் இந்த அதிசய உறக்கம் பற்றி தெரியுமா.? நீரின் ராஜாவாக திகழும் முதலைகள் ஒற்றைக் கண்ணை திறந்தவாறே தூங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் பறவைகள், டால்பின்கள் மற்றும் ஊர்வன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு தூங்கும்போது முதலையின் மூளையின் அரைப் பகுதியும் செயல்பாட்டில் உள்ளதாகவும், இதன் காரணமாக எந்த நேரத்திலும் எதிரியைத் தாக்கக்கூடிய வல்லமை அல்லது இரையைப் பிடிக்கக்கூடிய வல்லமை முதலைகளுக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது......!